உடற்தகுதியை நிரூபித்த ரோகித் சர்மா; ரசிகர்கள் உற்சாகம்

உடற்தகுதியை நிரூபித்தார் ரோகித் சர்மா. இதையடுத்து அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்திய அணியில், ஒருநாள் மற்றும் டி20 அணியில் விளையாடி வந்த ரோகித் சர்மா வெகுநாட்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணீயீலு இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை மேற்கொண்டார். அங்கு காயம் குணமடைந்து உடற்தகுதியை பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியின் பலனாக உடற்தகுதியை இன்று உடற்தகுதி பெற்ற ரோகித் சர்மா, நாளை அல்லது நாளைமறுநாள் ஆஸ்திரேலியா புறப்பட வாய்ப்புள்ளது. இத்தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.