இத்தாலி பைக் பந்தயத்தில் ஸ்பெயின் வீரர் ஜார்ஜ் முதலிடம்

இத்தாலி: இத்தாலியில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஸ்பெயின் வீரர் ஜார்ஜ் மார்டின் முதலிடம் பெற்றார்.

இத்தாலியில் நடைபெற்ற சான் மரினோ கிராண்ட் பிரி மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத்தில் ஸ்பெயின் நாட்டின் ஜார்ஜ் மார்டின் முதலிடம் பிடித்தார்,

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜார்ஜ் மார்டின், பந்தய தொலைவை 42 நிமிடத்தில் தனது டுகாட்டி பைக்கில் கடந்து வாகை சூடினார்.

அவரை விட ஒன்றரை வினாடி தாமதமாக வந்த மார்கோ பெஸேச்சி இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரான்செஸ்கோ பன்யாயா மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.