புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கவலை

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தது. பின்னர் சென்னை அணி 165 ரன்கள் அடித்தால் வென்று என்ற இலக்குடன் களம் இறங்கியது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். 19-வது ஓவரை அவர் வீசினார். முதல் பந்தை வீசும்போது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது.

பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் அத்துடன் வெளியேறினார். கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 15 ரன்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். அதுபோல் நேற்றும் 3.1 ஓவரில் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

தற்போது அவரது காயம் ஐதாபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விக்குப்பின் தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் புவனேஷ்வர் குமார் காயம் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.

புவனேஷ்வர் ஒருவேளை சில போட்டிகளில் விளையாடவில்லை எனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, மிட்செல் மார்ஷ் இதே காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.