சைக்கிள் பந்தயத்தின் போது பள்ளத்தாக்கில் விழுந்த சுவிஸ் வீரர் உயிரிழப்பு

சுவிஸ்: டூர் டி சுவிஸ்” சைக்கிள் பந்தயத்தின் போது பள்ளத்தாக்கில் விழுந்த சுவிட்சர்லாந்து வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

”டூர் டி சுவிஸ்” சைக்கிள் பந்தயத்தின் போது பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயமடைந்த சுவிட்சர்லாந்து வீரர் ஜினோ மாடர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறுதி சுற்று நிறைவடையும் தருவாயில், லா பன்ட் மலைப்பாதை வழியாக வேகமாக சைக்கிளில் இறங்கிக்கொண்டிருந்த ஜினோ மாடர், மற்றொரு வீரர் மீது மோதியதால் நிலைதடுமாறி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தார்.

உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜினோ மாடர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.