இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச அரங்கில் விராட் கோலியின் 46வது சதம்

திருவனந்தபுரம்: இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச அரங்கில் விராட் கோலியின் 46வது சதம் இதுவாகும்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 தொடரை பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-சும்பன் கில் களம் இறங்கினார்கள். இதில், இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16வது ஓவரில் ரோகித் சர்மா (42 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அதன் பிறகு விராட் கோலியுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் விகிதம் வேகமாக அதிகரித்தது. 97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் குவித்த சுப்மன் கில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச அரங்கில் விராட் கோலியின் 46வது சதம் இதுவாகும்.