கடைசி 3 டெஸ்ட்களில் விளையாடாததற்கு என்ன காரணம்; விளக்கம் அளித்த விராட் கோலி

கடைசி 3 டெஸ்ட்களில் விளையாடாமல் நாடு திரும்புவதற்கு என்ன காரணம் என்று விராட்கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு முதல் குழந்தை ஜனவரியில் பிறக்க இருக்கிறது.

தற்போது ஆஸ்திரோலியாவுக்கு எதிரான 3 வகையான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வரும் விராட்கோலி முதல் டெஸ்ட் போட்டி (டிசம்பர் 17-21) முடிந்து நாடு திரும்புகிறார்.

இதனால் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலியின் முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஆங்காங்கே சில விமர்சனங்களும் எழுகின்றன. இந்நிலையில் மூன்று போட்டிகளில் விலக நினைத்தது ஏன்? என பதில் அளித்து விராட் கோலி தெரிவித்துள்ளதாவது:

''எங்களுடைய முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்க இருப்பதால் நான் சொந்த நாடு திரும்ப விரும்பினேன். எனது வாழ்க்கையில் அது சிறப்பான மற்றும் அழகான தருணம்'' என தெரிவித்துள்ளார்.