Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் .... பாதுகாப்புக்காக 5 அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் .... பாதுகாப்புக்காக 5 அடுக்கு பாதுகாப்பு

By: vaithegi Tue, 06 Dec 2022 10:07:40 AM

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள்   ....   பாதுகாப்புக்காக  5 அடுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை: 5 அடுக்கு பாதுகாப்பு ...... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. எனவே அதன்படி இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

devotees,thiruvannamalai ,பக்தர்கள்   ,திருவண்ணாமலை

இதையடுத்து அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்துவரும் நிலையில், பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

Tags :