Advertisement

சரும பொலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்ரூட்

By: Nagaraj Sat, 20 May 2023 7:35:17 PM

சரும பொலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பீட்ரூட்

சென்னை: கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை பீட்ரூட் தீர்க்கிறது. தோல் பொலிவு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்களில் பீட்ரூட் ஒன்றாகும். இதில் உள்ள சத்துக்கள் சருமத்தை நன்கு பராமரிக்க உதவுகிறது. கரும்புள்ளிகள், முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளை பீட்ரூட் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

இரண்டு பங்கு பீட்ரூட் சாறு மற்றும் ஒரு பங்கு தண்ணீர் கலந்து சருமத்தில் தடவினால் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும். ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, இரவில் படுக்கும் முன் உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.

ஒரு தேக்கரண்டி பீட்ரூட் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்கரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும்.

black spots,clear skin,healthy , அழகான சருமம், தழும்புகள், முகப்பரு

பீட்ரூட் சாற்றில் தேன் மற்றும் பாலுடன் கலந்து முகமூடியாக தடவினால் சரும வறட்சி குறையும். பீட்ரூட் சாற்றை இரவில் உறங்கும் முன் உதடுகளில் தடவினால் உதடுகளின் கருமையும் விரைவில் மறையும். கடலை மாவு, பீட்ரூட் சாறு மற்றும் தயிர் தலா ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அதில் சிறிது ரோஜா இதழ் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவவும்.

சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும். தோல் மென்மையாக மாறும். முல்தானி மெட்டி பொடி, சிறிது பீட்ரூட் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றி தடவினால் கருவளையம் நீங்கும். பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, சிறிது கடலை மாவு கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போடவும்.

இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவடையும்.

Tags :