Advertisement

கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

By: Monisha Thu, 25 June 2020 10:04:52 AM

கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

17 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இந்த 17 நாட்கள் விலை உயர்வுக்குப் பிறகு நேற்று விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

petrol,diesel,price,crude oil,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை,கச்சா எண்ணெய்,சென்னை

இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் ஒரு லிட்டருக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 83.18 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 52 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 77.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியது. இன்று லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 80.02 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.79.92 ஆக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|