Advertisement

இன்று அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,100-ஐ தாண்டியது

By: vaithegi Wed, 28 Dec 2022 2:44:15 PM

இன்று அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,100-ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. ஆனாலும் பொதுமக்களிடம் தங்கத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறைவதில்லை.

மேலும் அயல் நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்தி வருவதால் தங்கத்தின் தேவை உயர்ந்து கொண்டே இருக்கிறது.அதனால் இதன் விலையும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

gold price,investment ,தங்கத்தின் விலை ,முதலீடு

ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688க்கும் இதே போன்று, ஒரு கிராம் ரூ.5,086க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரடியாக விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,100-ஐ தாண்டியுள்ளது.

அதாவது இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ.40,840க்கு விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் அதிரடியாக 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.74.60க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் ரூ.7460க்கும் விற்பனையாகிறது.

Tags :