Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் .. நடிகர் ரஜினிகாந்த்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் .. நடிகர் ரஜினிகாந்த்

By: vaithegi Sat, 13 Aug 2022 5:27:31 PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்  .. நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை சிறப்பிக்கும் வகையில் அனைத்து மக்களின் இல்லங்கள் தோறும் இன்று ஆகஸ்டு (13-ந்தேதி ) முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என்று கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நேற்று தேசிய கொடியை ஏற்றினார்.

rajinikanth,national flag ,ரஜினிகாந்த்,தேசிய கொடி

மேலும் இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்ட வீடியோவில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் அனைவரும் நமது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள் பல லட்சம்பேர் எத்தனையோ சித்தரவதைகளை,கொடுமைகளை அனுபவிச்சு இருக்கிறார்கள். மேலும் எத்தனையோ பேர் அவர்களோட உயிரை தியாகம் பண்ணிஇருக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம். நாம் எல்லோரும் இந்தியர்கள் என பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.

Tags :