Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குமா?

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குமா?

By: Monisha Thu, 10 Dec 2020 3:53:41 PM

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர.

இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா சொகுசு அறையில் இருந்து படப்பிடிப்புக்கு சென்ற பின்னர், அவர் மீண்டும் படப்பிடிப்பில் இருந்து அறைக்கு வந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சியில் சித்ராவை பார்க்க அவருடைய கணவர் ஹேமந்த் மட்டுமின்றி வேறு யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

actress chitra,suicide,cctv footage,sources,investigation ,நடிகை சித்ரா,தற்கொலை,சிசிடிவி காட்சி,ஆதாரங்கள்,விசாரணை

மேலும் சித்ராவை ஹேமந்த் மட்டும்தான் பார்க்க வந்தாரா? அல்லது படக்குழுவினர் மற்றும் நடிகர் நடிகைகள் யாராவது வந்தார்களா? வேறு வெளியாட்கள் யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் சிசிடிவி காட்சியின் முழுமையான ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் இதுவரை எந்தவித ஆதாரங்களும் சிக்காத நிலையில் இந்த சிசிடிவி காட்சியில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குமா? என்றும், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுமா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தடயவியல் அறிக்கையும் வந்துள்ளதாகவும் அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :