- வீடு›
- பொழுதுபோக்கு›
- இடைவெளி நீண்டதாக இருந்தாலும் வலுவாக களம் இறங்கும் நடிகர் ஜீவன்
இடைவெளி நீண்டதாக இருந்தாலும் வலுவாக களம் இறங்கும் நடிகர் ஜீவன்
By: Nagaraj Fri, 11 Dec 2020 9:08:32 PM
ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் ஜீவன்.
திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
தற்போது புதிய படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகும் படம் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில்தான் ஜீவன் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார். அதுவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களைத் தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இதில் ஹீரோயினாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடை வெளிக்குப் பிறகு இளவரசி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார்.
ஆசிஷ் வித்யார்த்தி, தலை வாசல் விஜய் ஆகியோர் நடிக் கிறார்கள் இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தின்
ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரீஸ் செய்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார்.
பா.விஜய், யுகபாரதி, விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். சுரேஷ் அர்ஸ்
எடிட்டிங் செய்கிறார். சி.பழனி வேல் அரங்கம் அமைக்கிறார்.
சூப்பர்
சுப்பராயன் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். தினேஷ், சிவசங்கர் நடனம்
அமைக்கின்றனர். மிகப்பெரிய சி ஜி நிறுவனம் ஒன்று இந்த படத்தின் கிராபிக்ஸ்
காட்சிகளை மிகப் பிரமாண்டமாகச் செய்து வருகிறார்கள். மிகப்பெரிய
பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு
சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் மொத்தம் 120 நாட்கள் நடைபெற
இருக்கிறது.