Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அஜித்- விஜய் சேர்ந்து நடிக்க கதை தயார்... எகிற அடிக்கும் எதிர்பார்ப்பு

அஜித்- விஜய் சேர்ந்து நடிக்க கதை தயார்... எகிற அடிக்கும் எதிர்பார்ப்பு

By: Nagaraj Tue, 09 Aug 2022 10:50:37 AM

அஜித்- விஜய் சேர்ந்து நடிக்க கதை தயார்... எகிற அடிக்கும் எதிர்பார்ப்பு

சென்னை: அஜித், விஜய் இருவரும் சேர்ந்து நடிக்க கதை தயார் ஆகிவிட்டது. இயக்குனர் வெங்கட் பிரபுதான் இந்த படத்தை இயக்க உள்ளார். விஜய்யிடம் இன்னும் பேசப்படவில்லை என்று கோலிவுட்டில் தகவல்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது.


தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் நடக்கவே நடக்காது என்று இருக்கும், ஆனால், அப்படிப்பட்ட சம்பவம் நடப்பதற்கான அறிகுறிகள் அவ்வப்போது தொடங்கும். அது சில சமயம் அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி நகரும். ஆனால், இதுவரை அப்படி ஒரு நடக்காத சம்பவம் நடந்தது இல்லை என்றே கூறலாம்.

அப்படி ஒரு சம்பவம் தான் விஜய் – அஜித் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிப்பது. இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக ஒரு படத்தில் நடித்தாலும், அதன் பிறகு தங்கள் பாதைகளை முடிவு செய்து, இருவரும் ஒன்றாக என்னும் பேச்சுக்கே இடம் இல்லை எனும் அளவுக்கு அவரவர் பாதையை தெளிவாக நகர்த்திக் கொண்டு, பொறாமை இல்லாத ஆரோக்கியமான போட்டி களத்தில் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர்.

அண்மையில் கூட இயக்குனரும், இசையமைப்பாளரும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் ஒரு பேட்டியில், ‘ என் மகனிடம் விஜய் – அஜித் இணைந்து பணியாற்றும் அளவிற்கு ஒரு கதை இருக்கிறது. விரைவில் அது நடக்கும்.’ என உளறிவிட்டார். இது சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது.

venkat prabhu,vijay,ajith,kushikisu,together,next year ,வெங்கட் பிரபு, விஜய், அஜித், கிசுகிசு, இணைந்து படம், அடுத்த வருடம்

ஒரு உச்ச நட்சத்திரத்தை இயக்கப் போகும் இயக்குனர் தான்தான் இயக்குகிறோம் என்று 100% உண்மையாக இருந்தாலும், அதனை அறிவிப்பு வரும் வரை வெளியில் சொல்ல மாட்டார்கள். லோகேஷ் கனகராஜ் போல. ஆனால் ஆரம்ப காலகட்டத்திலேயே வெளியில் உளறி விட்டால், அந்த உச்ச நட்சத்திரத்திற்கு அந்த இயக்குனர் மீது தான் வைத்த நம்பிக்கை போய்விடும்.


தற்போது கிட்டத்தட்ட தகவல் என்னவென்றால், விஜய் அஜித்தை வைத்து படம் இயக்க வெங்கட பிரபு ஒரு கதை தயார் செய்து உள்ளாராம். அந்த கதையை தற்போது இரண்டு திறமையான இயக்குனர்களிடம் கொடுத்து மெருகேற்றி வருகிறாராம்.

அந்தக் கதை அஜித்திற்கு தெரியுமாம், அவருக்கு பிடித்து போய்விட்டதாம். விஜயிடம் அந்த கதையை கூற சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லையாம். அனேகமாக வாரிசு திரைப்படம் முடிந்ததும் இந்த கதை விவாத பணிகளும் முடிந்துவிட்டால், வெங்கட் பிரபு விஜய்யிடம் கூற உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. அப்படி கூறி விஜயும் சம்மதித்தால், அஜித் விஜய் இணையும் திரைப்படம் ஏறக்குறைய அடுத்த வருடம் அறிவிக்கப்படலாம் என லேசாக கிசுகிசுக்கப்படுகிறது.

Tags :
|
|