- வீடு›
- பொழுதுபோக்கு›
- யாரை சொன்னார்... யாரை சொன்னார்... விவாதத்தை கிளப்பி விட்ட ராதாரவி
யாரை சொன்னார்... யாரை சொன்னார்... விவாதத்தை கிளப்பி விட்ட ராதாரவி
By: Nagaraj Sat, 11 June 2022 09:39:32 AM
சென்னை: யாரை சொன்னார் ராதாரவி என்பதுதான் இப்போதையை லேட்டஸ்ட் டாக் ஆக உள்ளது. என்ன விஷயம் என்றால் சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம் இருப்பதாக ராதாரவியும் கூறியதுதான்.
நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ராதாரவி பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில் நடந்த தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் மின்இழுவை ரயிலில் அடிவாரம் வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆன்மிக பூமிதான். சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. தெலுங்கு சினிமாவில் சிண்டிகேட் மூலம்தான் படம் எடுத்து வெளியிடுகிறார்கள். பெரிய பட்ஜெட் படம் வரும்போது சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. ஓடிடி தளம் இருப்பதால்தான் சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கின்றன.
வரும் காலங்களில் ஓடிடி தளத்தால் பெரிய ஹீரோக்களுக்கான மாஸ் குறைய வாய்ப்பு
உள்ளது. அதாவது ஹீரோக்களுக்கான பாலாபிஷேகம், திரும்ப திரும்ப பார்க்கும்
வழக்கம் ஆகியவை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறந்த
அரசியல் தலைவராக உள்ளார்.
பத்திரிகையாளர்களை திறம்பட
கையாள்வதால்தான் தொடக்க காலத்தில் அவருக்கு எதிரான கருத்துடையவர்கள்
தற்போது நடுநிலைக்கு வர தொடங்கியுள்ளனர். நடிகர் பயில்வான் ரங்கநாதன் யாரை
விமர்சனம் செய்கிறாரோ, சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாமே. எல்லாமே
வியாபாரம்தான் என்று அவர்தான் சொல்லியிருக்கிறாரே" என்றார்.
முன்னதாக
தமிழில் வெளியான பீஸ்ட், டான், விக்ரம் உள்ளிட்ட பல படங்களை உதயநிதியின்
ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆனால் உதயநிதி எம்.எல்.ஏ ஆன
பிறகு அனைவரையும் மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். அதேசமயம், தான் யாரையும்
மிரட்டவில்லை என விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவி உதயநிதி விளக்கம்
கொடுத்திருந்தார்.
தற்போது சினிமாவில் ஒருசிலரின் ஆதிக்கம்
இருப்பதாக ராதாரவியும் கூறியிருப்பதால் அவரும் உதயநிதியைத்தான் மறைமுகமாக
சுட்டிக்காட்டியிருக்கின்றனர் என பாஜகவினர் கூறிவருகின்றனர்