Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவக்குணங்கள் நிரம்பிய தும்பைச் செடி பற்றி தெரிந்து கொள்வோம்

மருத்துவக்குணங்கள் நிரம்பிய தும்பைச் செடி பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Tue, 20 Sept 2022 9:22:47 PM

மருத்துவக்குணங்கள் நிரம்பிய தும்பைச் செடி பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்டிமீட்டர் வரை உயரமாக வளரும். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும். இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும்.

இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் .

தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம்.குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலை மற்றும் பக்கவாதம் , சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்பொன்னவற்றுக்கு நல்ல பலனை தரும் .

tumbai,juice,cures scabies,itching ,தும்பையிலை, சாறு, குணமாகும், சிரங்கு, நமச்சல்

காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்.

தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும்.

பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம். தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுக்குள் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குளித்து வரச் சிரங்கு, சொறி, நமச்சல் போகும். தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ இருந்தால் குணமாகும்.

Tags :
|
|