பீர்க்கங்காயில் அடங்கியுள்ள ஏராளமான மருத்துவக்குணங்கள்
By: Nagaraj Wed, 30 Dec 2020 8:45:00 PM
பீர்க்கங்காயில் ஏராளமான மருத்துவக்குணங்கள் அடங்கி உள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சக்கரை சேர்த்து நன்றாக கலக்கி காலை மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.
பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும். இதே போல், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் வைத்தால், காயம் சீக்கிரம் ஆறும். பீர்க்கை நார் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்க கூடியது.
பீர்க்கங்காயை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க
வைத்து அதனோடு தேவைக்கு ஏற்ப உப்பிட்டு அன்றாடம் காலை மாலை என இரண்டு வேளை
பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும்.
உடல் ஆரோக்கியம் பெறும்.
பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர்
சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை குடித்து வருதலால் ஆஸ்துமா
எனும் மூச்சு முட்டுதல் குணமாகும். பீர்க்கங்காயைச் சிறு சிறு
துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு,
அதை சாதம் வடித்த கஞ்சியோடு கலந்து, குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15
அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
தலைமுடியும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பீர்க்கங்காயின்
இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து தொழு
நோயின் மேலே பூசி வந்தால், தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.