Advertisement

3 மாவட்டங்களில் புதிதாக 184 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Sat, 28 Nov 2020 5:24:59 PM

3 மாவட்டங்களில் புதிதாக 184 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் புதிதாக 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 45 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 712 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona virus,infection,chengalpattu,tiruvallur,kanchipuram ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சீபுரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 557 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,522 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 651 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 277 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :