Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் சந்தையில் விற்பனைக்கு வந்த 25 டன் ராஜஸ்தான் வெங்காயம்

திருப்பூர் சந்தையில் விற்பனைக்கு வந்த 25 டன் ராஜஸ்தான் வெங்காயம்

By: Monisha Mon, 23 Nov 2020 4:10:33 PM

திருப்பூர் சந்தையில் விற்பனைக்கு வந்த 25 டன் ராஜஸ்தான் வெங்காயம்

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஏராளமான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் பெரிய வெங்காயம் நேற்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

onions,market,sale,color,acceptance ,வெங்காயம்,சந்தை,விற்பனை,நிறம்,வரவேற்பு

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:- தென்னம்பாளையம்சந்தைக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த பகுதிகளில் வெங்காயத்தின் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், பெரிய வெங்காயத்தின் நிறம் மங்கலாக உள்ளது.இதனால் இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நல்ல நிறத்துடன் இருக்கும் ராஜஸ்தான் வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இந்த பெரிய வெங்காயத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது என அவர்கள் கூறினார்கள்.

Tags :
|
|
|
|