Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் வீசிய சக்தி வாய்ந்த புயலுக்கு 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வீசிய சக்தி வாய்ந்த புயலுக்கு 3 பேர் உயிரிழப்பு

By: Nagaraj Sat, 01 Apr 2023 11:31:44 PM

அமெரிக்காவில் வீசிய சக்தி வாய்ந்த புயலுக்கு 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வீசிய சக்தி வாய்ந்த புயலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய பகுதியை நேற்று சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியது.

இதில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, நேற்று மதியம் சூறாவளி தாக்கியதில், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார்.

3 people,america,hurricane,loss of life,power, ,3 பேர்,  அமெரிக்கா, உயிரிழப்பு, சக்தி, சூறாவளி

அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கூடுதலாக, செயின்ட் பிரான்சிஸ் கவுண்டியில் உள்ள வெய்ன் நகரில் இரண்டு பேர் இறந்தனர்.

நேற்றிரவு மின்சாரம் இன்றி 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிசிசிப்பியில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கி 26 பேரை பலி வாங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு மற்றொரு சூறாவளி தாக்கியுள்ளது. அதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags :
|