மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
By: Nagaraj Wed, 28 Sept 2022 5:24:20 PM

புதுடில்லி: 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 34 சதவீதமாக இருந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்திய பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2022, ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும். 7-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
Tags :
subsidy |
raised |








