Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கு உதவியதாக 9 பேர் கைது

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கு உதவியதாக 9 பேர் கைது

By: Nagaraj Sat, 10 Oct 2020 10:33:55 PM

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கு உதவியதாக 9 பேர் கைது

9 பேர் கைது... சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கு உதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை ஹாங்காங் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஒகஸ்ட் மாதம் படகு மூலம் பிரதேசத்தில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி பிரதான நிலப்பகுதி அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 குடியிருப்பாளர்களுக்கு உதவியதாக இவர்கள் சந்தேகிக்கப்படுகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் முத்தரப்பு பணியகத்தின் மூத்த கண்காணிப்பாளர் ஹோ சுன்-துங் இதுகுறித்து கூறுகையில், ‘இளைய 27 மற்றும் மூத்த 72 வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் இந்த குழுவில் உள்ளனர்’ என கூறினார்.

9 arrested,confiscated,cash,aid,china ,9 பேர் கைது, பறிமுதல், ரொக்கப்பணம், உதவி, சீனா

மேலும் அவர் கூறுகையில், ‘இவர்கள் 12 பேரின் நண்பர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். குற்றவாளிகளுக்கு உதவியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, இந்த நபர்கள் மீது வழக்குத் தொடுப்பதைத் தடுக்க அல்லது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க அவர்கள் ஏதாவது செய்திருக்கலாம்.

இதில், அவர்களுக்கு நிதி வழங்குதல், படகு வழங்குதல், போக்குவரத்தை வழங்குதல் மற்றும் ஹொங்கொங்கிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு தங்குமிடம் வழங்குதல் ஆகியவை அடங்கும்’ என கூறினார்.

இவர்களிடமிருந்து ரொக்க பணம், கணினி, கைத் தொலைப்பேசிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags :
|
|