Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்ஜினீயரிங் படிப்பு ... முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பின

என்ஜினீயரிங் படிப்பு ... முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பின

By: vaithegi Mon, 26 Sept 2022 07:15:33 AM

என்ஜினீயரிங் படிப்பு   ...   முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பின

சென்னை: என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவுபெற்றன. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து அந்த இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்றில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 269 கல்லூரிகளில் ஒரு இடங்களைகூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. 116 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களையும், மற்ற கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் இடங்களையும் தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.

engineering studies,discussion ,என்ஜினீயரிங் படிப்பு ,கலந்தாய்வு

இதனை அடுத்து இதில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.என். கல்லூரியில் 87.89 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரியில் 86.82 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியில் 85.58 சதவீத இடங்களும், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 83.87 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.

மேலும் பெரும்பாலும் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர். 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. இதற்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Tags :