Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனக்கு தானே கல்லறை கட்டி வசித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் மரணம்

தனக்கு தானே கல்லறை கட்டி வசித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் மரணம்

By: Nagaraj Thu, 16 June 2022 4:56:22 PM

தனக்கு தானே கல்லறை கட்டி வசித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் மரணம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி தனக்குத் தானே கல்லறை கட்டி வசித்த மூதாட்டி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொல்லங்கோடு அருகே சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி (70). திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

cemetery,grandmother,death,2 rooms,malaise,police ,
கல்லறை, மூதாட்டி, மரணம், 2 அறைகள், உடல்நலக்குறைவு, போலீசார்

இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கடந்த 12-ந் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|