Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

By: Nagaraj Fri, 20 Jan 2023 11:41:51 PM

நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

காஞ்சிபுரம்; மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் நாளை வேலை நாளாக பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அப்போது வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

announced,kanchipuram,schools,tomorrow, ,காஞ்சிபுரம், தொடர் மழை, பள்ளி, விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலை நாட்களை ஈடுசெய்யும் வகையிலும், மாணவர்களுக்கான தேர்வு நடந்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை வகுப்பு அட்டவணையை பின்பற்றி முழு வேலை நாளாக கருத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :