Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

By: Nagaraj Mon, 13 July 2020 5:35:29 PM

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

மாலை வரை ஒத்தி வைப்பு... சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசமானது. விசாரணையின் போது முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

sathankulam,incident,cpcit,sreedhar,bail petition ,சாத்தான்குளம், சம்பவம், சிபிசிஐடி, ஸ்ரீதர், ஜாமீன் மனு

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் ஜாமீன்மனு தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறை தரப்பில் யாரும் ஆஜராகாததால் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரின் மனுவை மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags :
|