Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது

பீகாரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது

By: Nagaraj Fri, 06 Nov 2020 09:20:54 AM

பீகாரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது

நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு... பீகார் சட்டசபை 78 தொகுதிகளில் நாளை மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல்கட்ட தேர்தலும், கடந்த 3-ந் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் முடிவடைந்தன.

இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

final campaign,bihar,polling,tomorrow,machinery ,இறுதிக்கட் பிரசாரம், பீகார், வாக்குப்பதிவு, நாளை, எந்திரங்கள்

இந்த மூன்றாம் கட்ட தேர்தலுக்கு உட்பட்ட தொகுதிகளில் மொத்தம் 12 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். உட்புற மாவட்டங்களான அரேரியா, சாகர்சா ஆகிய மாவட்டங்களிலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மாதேபுரா, அரேரியா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

முதல்-மந்திரி நிதிஷ்குமார், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags :
|