பறவைகளின் எச்சம் நுரையீரலை பாதிக்கும்..
By: Monisha Thu, 30 June 2022 9:49:56 PM
தமிழ்நாடு: செல்லப் பிராணிகளை வளர்த்தல் ஆபத்த என்ற கேள்விகள் பரவி வருகிறது. புறாக்கள் எச்சம் மட்டும் அல்லாமல் விலங்குகள் மற்றும் பறவைகள் எச்சமும் நுரையீரலை பாதிப்படைய செய்யும் என்று மருத்துவரும் வனவிலங்குகள் ஆர்வலருமான ஒருத்தர் குறிபிட்டார்.
மேலும் சிட்டகோசிஸ் எனப்படும் மனிதர்கள் நுரையீரலை பாதிக்கும் எச்சம் பறவைகளிருந்து இருந்து வருகிறது.மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பும் ஒன்று.
செல்லப் பிராணிகள் கொஞ்சுவது அதனுடன் தூங்குவது என்று பலர் விரும்பிகிறார்கள் ஆனால் அதனால் வரும் ஆபத்து யாரும் உணரவில்லை.
நாம் சுவாசிக்கும்போது பறவை எச்சங்களில் இருக்கும் நுண்ணுயிர்கள், பூஞ்சைகள் போன்றவை சுவாச குழாய் மூலமாக நேரடியாக நுரையீரலை சென்றடையும்.
இது மெல்ல மெல்ல நுரையீரலை சுருங்கி விரியும் தன்மையை குறைக்கும்.
இதனால் போதிய ஆக்சிஜன் மூச்சுக் குழாய் வழியாக உள்ளே சென்றாலும், அதனை நுரையீரலை ஏற்றுக்கொள்ள முடியாது. சில ஆண்டுகளில் இது நுரையீரலை செயல் இழக்க செய்யும். எனவே பறவைகள் வளர்பவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டால் இதனை அலச்சியம் செய்யாமல் அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளுகிறேன் என்று கூறினார்.