Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு... பாகிஸ்தான் பயங்கரவாத குழு முக்கிய தளபதி பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு... பாகிஸ்தான் பயங்கரவாத குழு முக்கிய தளபதி பலி

By: Nagaraj Wed, 10 Aug 2022 07:44:57 AM

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு... பாகிஸ்தான் பயங்கரவாத குழு முக்கிய தளபதி பலி

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதி பலி... பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோந்த முக்கிய தளபதியும் அவரது 3 உதவியாளா்களும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகளும் டிடிபி அமைப்பினரும் கூறுகையில், ஒமா் காலித் குராசானி என்ற அந்த தளபதி குறித்த தகவல்களை அளிப்பவா்களுக்கு 30 லட்சம் டாலா் (சுமாா் ரூ.239 கோடி) சன்மானம் அளிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்ததாகத் தெரிவித்தனா்.

pakistan,word,bomb blast,terrorist,victim,fear ,பாகிஸ்தான், வார்த்தை, குண்டு வெடிப்பு, பயங்கரவாதி, பலி, அச்சம்

எனினும், இந்தத் தாக்குதலுக்கு யாா் காரணம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

குராசானி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் அரசுக்கும் டிடிபி-க்கும் இடையே காபூலில் நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது.

Tags :
|
|