Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குன்னூரில் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வந்த காட்டு மாடு

குன்னூரில் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வந்த காட்டு மாடு

By: Nagaraj Thu, 18 June 2020 9:25:09 PM

குன்னூரில் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வந்த காட்டு மாடு

ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தலால் மாலையிலேயே வீடுகளுக்கு மக்கள் திரும்பும் நிலை உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராமன் தெருவில் திடீரென வந்த காட்டுமாடு சாலையில் உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு வீடுகளில் முடங்கினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் மிக அருகில் உள்ளது பரசுராமன் தெரு. இப்பகுதியில் எந்த விதமான வனங்களோ, சோலைகளோ இல்லாத சூழ்நிலையில் திடீரென இப்பகுதிக்கு வந்த காட்டுமாடு டிடிகே சாலை, பரசுராமன் தெரு, கிருஷ்ணாபுரம், வழியாக வண்ணாரப்பேட்டை சாலை வழியாக உலா வந்தது.

nilgiris,coonoor,barbarous,surfing,people fear ,
நீலகிரி, குன்னூர், காட்டுமாடு, உலா வந்தது, மக்கள் அச்சம்

காட்டுமாடு ஊருக்குள் உலா வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் முடங்கினார். ஜல்லிக்கட்டு காளை போல் அசால்ட்டாக தெருக்களில் இந்த காட்டு மாடு நடமாடியது.

பின்னர் காட்டுமாடு அங்கே இருந்து சென்றவுடன் மக்கள் நிம்மதி அடைந்தனர். குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் ஒற்றை காட்டுமாடு நடமாட்டம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே வனத்துறையினர் இந்த காட்டுமாட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :