Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொலைநோக்கு சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் எளிமையாக்கப்பட்டு உள்ளது - மோடி

தொலைநோக்கு சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் எளிமையாக்கப்பட்டு உள்ளது - மோடி

By: Karunakaran Fri, 04 Sept 2020 6:49:44 PM

தொலைநோக்கு சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் எளிமையாக்கப்பட்டு உள்ளது - மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட கொரோனாவிலிருந்து குணமடைவோரின் விகிதம் அதிகரித்துள்ளது சற்று ஆறுதலடைய செய்கிறது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா மூலோபாய ஒத்துழைப்பு மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, தற்போதைய சூழலில் மனிதர்களை மையப்படுத்திய புதிய மனநிலை வேண்டும். இந்த கொரோனா தொற்று காலத்தில் சுகாதார வசதிகளை சாதனையளவான காலத்தில் மேம்படுத்தியதன் மூலம் இந்த மனநிலையை இந்தியா உருவாக்கி இருப்பதாக கூறினார்.

business,india,far-sighted reforms,modi ,வர்த்தகம், இந்தியா, தொலைநோக்கு சீர்திருத்தங்கள், மோடி

முதன் முதலாக முக கவசம் மற்றும் முகத்தை மறைக்கும் நடவடிக்கைளை பொது சுகாதார நடவடிக்கையாக ஊக்குவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் சமூக இடைவெளியை பொது பிரசாரமாக மேற்கொண்டதிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. சமீபத்திய மாதங்களில் எனது அரசு மேற்கொண்ட தொலைநோக்கு சீர்திருத்தங்களால் இந்தியாவில் வர்த்தகம் எளிமையாக்கப்பட்டு உள்ளது என மோடி கூறினார்.

மேலும் அவர், ஜனநாயகம் மற்றும் பன்மைத்தன்மையும் உறுதியளிக்கப்பட்டு உள்ளதாகவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் கொள்கை தொடர்ச்சி போன்றவற்றால் கொரோனாவுக்கு பின் உலக முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாக இந்தியா உள்ளதாக தெரிவித்தார்.

Tags :
|