Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 04 Oct 2022 2:10:02 PM

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு  தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு ... இன்று (04.10.2022) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு (05.10.22 – 08.10.22) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ 07.10.2022 மற்றும்‌ 08.10.2022 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ ஏன் தெரிவித்துள்ளது

moderate rain,chennai ,மிதமான மழை,சென்னை

இதையடுத்து கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் இடிமின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ எனவும், நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ எனவும், நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌ எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :