Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

நாகை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 05 Dec 2022 09:03:49 AM

நாகை, திருவாரூர் உள்பட  7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு .... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அடுத்த 48 மணி நேரத்தி; மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8ந் தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

rainy,chennai ,மழை,சென்னை

இதனை அடுத்து இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே அதன்படி, நாகை, திருவாரூர், சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,.

Tags :
|