Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

By: vaithegi Sat, 25 June 2022 12:58:01 PM

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை :தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயல்பாக இரவு 10.25 மணிக்கும், 11.25 மணிக்கும் , 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணிக்கும், 11.40 மணிக்கும், 11.59 மணிக்கும் இயக்கப்படும்.

maintenance work.south railway ,பராமரிப்பு பணி.தெற்கு ரயில்வே

ஆனால், தற்போது பராமரிப்பு பணி காரணமாக இன்று ( ஜூன் 25) மற்றும் ஜூன் 27 ஆம் தேதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.40 மணி, 11.15 மணி மற்றும் 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.30 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற ஜூன் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்த தேதிகளில் வேறு வழியில் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Tags :