Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள்ளச்சாராய சம்பவத்தில் மெத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் கைது

கள்ளச்சாராய சம்பவத்தில் மெத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் கைது

By: Nagaraj Wed, 17 May 2023 10:11:34 AM

கள்ளச்சாராய சம்பவத்தில் மெத்தனால் விற்பனை செய்த கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் கைது

விழுப்புரம்: கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் கைது... விழுப்புரம் மாவட்ட கள்ளச்சாராய சம்பவத்தில் கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரி அமரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

investigation,arrest,chennai,chemical,factory,private ,விசாரணை, கைது, சென்னை, கெமிக்கல், தொழிற்சாலை, தனிப்படையினர்

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த தனிப்படையினர் மதுரவாயலில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வரும் இளையநம்பி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் வாங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

Tags :
|