Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை ஐ.ஐ.டி. யில் 104 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

சென்னை ஐ.ஐ.டி. யில் 104 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

By: Monisha Mon, 14 Dec 2020 3:06:50 PM

சென்னை ஐ.ஐ.டி. யில் 104 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

சென்னை ஐ.ஐ.டி. யில் மாணவர்கள், ஊழியர்கள் என இதுவரை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் ஐ.ஐ.டி. யில் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி. யில் இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

iit,corona,test,fear,vulnerability ,ஐஐடி,கொரோனா,பரிசோதனை,அச்சம்,பாதிப்பு

ஐ.ஐ.டி. மாணவர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி. யில் நேற்றுவரை 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி. கேண்டீனில் உணவருந்தாமல் உணவை விடுதிக்கு எடுத்துச்சென்று சாப்பிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்திற்கு சென்று சுகாதாரத்துறை அமைச்சரும் நானும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|
|