Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீரற்ற காலநிலையிலும் நுவரெலியாவில் 65 சதவீத வாக்குகள் பதிவு

சீரற்ற காலநிலையிலும் நுவரெலியாவில் 65 சதவீத வாக்குகள் பதிவு

By: Nagaraj Wed, 05 Aug 2020 10:28:27 PM

சீரற்ற காலநிலையிலும் நுவரெலியாவில் 65 சதவீத வாக்குகள் பதிவு

சீரற்ற காலநிலையிலும் வாக்குப்பதிவு... நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது. நுவரெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கத்த ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 65 வீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

tomorrow,the counting of votes,the ballot,the chancellor ,நாளை, வாக்குகள் எண்ணுதல், வாக்குப்பதிவு, அரசாங்க அதிபர்

நுவரெலியா மாவட்டத்தில் சராசரியாக 75வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அத்தோடு நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags :