Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அச்சம் வேண்டாம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அச்சம் வேண்டாம்

By: Nagaraj Sat, 19 Nov 2022 10:00:14 PM

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அச்சம் வேண்டாம்

சென்னை: எந்த பாதிப்பும் ஏற்படாது... தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என மின் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக முழுவதும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. மின் நுகர்வோர்களின் பதிவு செய்த மொபைல் போன் எங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் இந்த செய்தி அனுப்பப்படும்.

electricity connection,aadhaar connection,people,fear not,free ,மின் இணைப்பு, ஆதார் இணைப்பு, மக்கள், அச்சம் வேண்டாம், இலவசம்

ஒருவர் ஐந்து இணைப்பு, மூன்று இணைப்பு வைத்திருந்தது ஆதார் எண் இணைக்கப்பட்டால் ஒரு இணைப்பிற்கு தான், 100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்று கூறுவது தவறானது. அனைவருக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின்வாரியத்தின் இழப்பை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விபரங்கள் தற்போது தேவைப்படுகிறது.


அதற்காகத்தான் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
|