Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கீழடியில் வணிகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்; எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

கீழடியில் வணிகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்; எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

By: Nagaraj Sat, 04 July 2020 9:05:42 PM

கீழடியில் வணிகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்; எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

கீழடியில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு... சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 6 ம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கணடறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது.

adidas,business,factory,weights,archeology ,கீழடி, வணிகம், தொழிற்சாலை, எடைக்கற்கள், தொல்லியல்

இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் நேற்று பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அதன் கீழ்ப்பகுதி தட்டையாகவும் உள்ளது. இந்த கற்கள் முறையே 8,18,150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன.

இந்த அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை அமைப்பை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், மூலப்பொருள்களை உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் செயல்பட்டு உள்ளதற்கு முக்கிய ஆதாரமாக இவைகள் திகழ்கிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் வணிகம் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
|