Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து எப்போது வகுப்புகள் துவங்கும் என்பதற்கான முழு அறிவிப்பு

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து எப்போது வகுப்புகள் துவங்கும் என்பதற்கான முழு அறிவிப்பு

By: vaithegi Wed, 03 May 2023 3:31:52 PM

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து எப்போது வகுப்புகள் துவங்கும் என்பதற்கான முழு அறிவிப்பு

இந்தியா: தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்றும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 -ம் தேதி பள்ளிகள் துவங்கும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்பு எப்போது துவங்கும் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் மே 1- ம் தேதி பள்ளி மூடப்பட்ட நிலையில் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

classes,summer vacation ,வகுப்புகள் ,கோடை விடுமுறை

அதை தொடர்ந்து கேரளாவில் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1- ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளனர். மத்திய பிரதேஷ் மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்ததாக ஆந்திர மாநிலத்தில் மே 1- ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 12-ம் தேதி அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :