உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு குட் நியூஸ்
By: vaithegi Tue, 21 Nov 2023 2:21:13 PM
சென்னை: தமிழகத்தின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் மூலம் தொடங்கி வைக்கப்பட்ட மாதம் ரூபாய் 1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதல் கட்டமாக 1 கோடியே 6,52,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 66 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
எனவே அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் 2-ம் முறை மேல்முறையீட்டு சமயத்திலும் பலரின் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்களுக்கான வாய்ப்புகள் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. தற்போது நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் எனவும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் காரணமாக மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.