Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி

வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி

By: Nagaraj Wed, 11 Nov 2020 10:05:40 PM

வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி

அரசு பணி வழங்கல்... தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை அருகே கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி குற்றவாளி துரைமுத்துவை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழு சென்றது. துரைமுத்து மீது 2 கொலை வழக்குகள் இருப்பதால் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

policeman subramanian,wife,civil servant,trauma,death ,காவலர் சுப்பிரமணி, மனைவி, அரசுப்பணி, அதிர்ச்சி, மறைவு

அப்போது துரைமுத்து காவலர்களிடம் இருந்து தப்பிக்க தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில், காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு வீசிய துரைமுத்துவும் அந்த விபத்தில் சிக்கி சம்பவ உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியன் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|
|