Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் ... ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் ... ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

By: vaithegi Sat, 12 Aug 2023 3:17:58 PM

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் ... ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்நிலையில், நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருப்பதாக கூறி தமிழக அரசு அதை எதிர்த்து கொண்டு வருகிறது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோல் சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி கொண்டு வருகிறார்.

governor rn ravi,neet exemption bill ,ஆளுநர் ஆர்.என்.ரவி ,நீட் விலக்கு மசோதா

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இதையடுத்து இவ்விழாவில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என அவர் கூறினார்.

Tags :