Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 13வது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வம்... அமைச்சர் அல்சப்ரி தகவல்

13வது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வம்... அமைச்சர் அல்சப்ரி தகவல்

By: Nagaraj Sat, 26 Nov 2022 9:54:31 PM

13வது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வம்... அமைச்சர் அல்சப்ரி தகவல்

கொழும்பு:13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

ஊடகத்தினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்றும் கூறியுள்ளார்.

minister,information,13th amendment,india,powers ,அமைச்சர், தகவல், 13வது திருத்தம், இந்தியா, அதிகாரங்கள்

மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை என்றும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்ப வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|