Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் தனியார் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம் தனியார் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

By: Nagaraj Wed, 20 July 2022 09:49:26 AM

காஞ்சிபுரம் தனியார் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம்: பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு... காஞ்சிபுரத்தில் தனியாா் பள்ளியின் 2-ஆவது மாடியிலிருந்து குதித்து மாணவா் ஒருவா் தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக அந்தப் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் இஷிகாந்த்(16). இவா் காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் இவா் பள்ளி 2-வது மாடியிலிருந்து குதித்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இவா் 2-வது மாடியிலிருந்து குதித்தாரா அல்லது கீழே தவறி விழுந்தாரா என்பது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

officers,student,school,kanchipuram,suicide attempt,investigation ,அதிகாரிகள், மாணவர், பள்ளி, காஞ்சிபுரம், தற்கொலை முயற்சி, விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம் போல் காஞ்சிபுரத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி முழுவதையும் போலீஸாா் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.

காஞ்சிபுரம் கோட்டாட்சியா் கனிமொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, வட்டாட்சியா் பிரகாஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரும் சம்பவ நடந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா்.

Tags :
|