Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர், நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

திருப்பூர், நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 18 Oct 2022 10:07:19 AM

திருப்பூர், நீலகிரி உள்பட  15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: கன மழைக்கு வாய்ப்பு .. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அதன்படி இன்றைய தினம் திருப்பூர், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை , கன்னியாகுமரி, திருநெல்வேலி , கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு , சேலம், விருதுநகர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

heavy rains,tirupur,nilgiris ,கன மழை,திருப்பூர், நீலகிரி

இதனை அடுத்து நாளை 19ஆம் தேதி, நாளை மறுதினம் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ,தஞ்சாவூர், கடலூர் , விழுப்புரம் புதுக்கோட்டை, சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் , ராணிப்பேட்டை , திருவண்ணாமலை , திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்திருக்கிறது .

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகம் மூட்டத்துடன் இருக்கும் என்றூம், நகரில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Tags :