Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்; அச்சத்தில் கிராம மக்கள்

ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்; அச்சத்தில் கிராம மக்கள்

By: Monisha Wed, 23 Dec 2020 12:56:19 PM

ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்; அச்சத்தில் கிராம மக்கள்

கர்நாடக வனப்பகுதியிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப்பெயர்ச்சியாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன.

ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம், தேனிக்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் பகல் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன. இந்நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையை கடந்து சென்றன.

wilderness,elephants,camp,people,fear ,வனப்பகுதி,யானைகள்,முகாம்,மக்கள்,அச்சம்

இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் புழுதியை கிளம்பியப்படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கடந்து சென்றன. இதை அப்பகுதி மக்கள், செல்போனில் வீடியோ எடுத்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஆங்காங்கே தனித்தனி குழுக்களாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
|
|