Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவன்

அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவன்

By: Nagaraj Wed, 22 July 2020 11:57:55 AM

அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவன்

அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்த மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்த பஜன் சிங், புஜா தம்பதி தங்கள் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று, குழந்தை அழுது கொண்டிருந்த போது புஜா தாய்ப்பால் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பஜன் சிங், இரும்பு கம்பியை வைத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

prosecution,police,arrest,breastfeeding,husband ,வழக்குப்பதிவு, போலீசார், கைது, தாய்ப்பால், கணவன்

இதனால் படுகாயமடைந்த புஜா நினைவிழந்து கீழே விழுந்தார். இதனையடுத்து பஜன் சிங் மருத்துவமனைக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த காவல்துறையினர், பஜன் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பஜன் சிங் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.

Tags :
|
|