Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தால் குத்துவேன்... கத்தியுடன் ரவுசு விட்ட ஆசாமியை கைது செய்த போலீசார்

வந்தால் குத்துவேன்... கத்தியுடன் ரவுசு விட்ட ஆசாமியை கைது செய்த போலீசார்

By: Nagaraj Sun, 02 Oct 2022 5:28:58 PM

வந்தால் குத்துவேன்... கத்தியுடன் ரவுசு விட்ட ஆசாமியை கைது செய்த போலீசார்

பிரான்ஸ்: பிரான்சிஸ் உள்ள வீதி ஒன்றில் 35 வயதுடைய இளைஞர் ஒருவர் வீதியில் நடந்து சென்ற பலரை கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளார். உடனடியாக பொலிஸாருக்கு அங்கிருந்தவர்கள் அழைப்பேற்படுத்தி பொலிஸாரை உடனடியாக அங்கு வரவழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் குறித்த நபர் வீதியில் சென்ற இரண்டு பேரை தாக்கி தள்ளிவிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸர் குறித்த நபரை கைது செய்தனர். குறித்த நபர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

knife pointed,threats,accusations,france,people,fear ,
கத்தியை காட்டினார், மிரட்டல், குற்றச்சாட்டுகள், பிரான்ஸ், மக்கள், அச்சம்

சந்தேகநபர் பிரான்ஸில் குடியேறுவதற்காக போராடி வருபவர் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை, “பிரெஞ்சு காரர்களை நான் கொல்லப்போகிறேன்!” எனவும் கோஷமிட்டதாக சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், பலர் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஏற்கனவே பொலிஸாரால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் ஆயுதங்கள் மற்றும் கத்தியை எடுத்து சென்று மக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|