Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நாளை (செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் நாளை (செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Thu, 22 Sept 2022 3:08:30 PM

சென்னையில் நாளை (செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. உணவு, குடிநீர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மின்சாரமும் அனைத்திற்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. அதனால் அரசு தடையில்லா மின்சாரம் வழங்க பல ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது.

எனவே அதற்காக குறிப்பிட்ட சில துணைமின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும்.

power supply,chennai ,மின் விநியோகம்,சென்னை

நாளை சென்னையில் நாளை (செப்.23) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பெரம்பூர் பகுதியில் சந்திரசேகரன் சாலை,பெரியார் நகர் 1,2,3,4 வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, அதே போல தாம்பரம் பகுதியில் காயத்திரி நகர், பம்மல் அன்னை தெரசா தெரு, வினோபோஜி நகர்,மரியன் தெரு ராஜகீழ்பாக்கம் மாருதி நகர், ஈ.பி.காலனி, தென்றல் நகர், பாக்கியம் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பொன்னேரி பகுதியில் 33 கி.வோ. மத்சய நாயகி இரும்பு கம்பெனி, மாதர்பாக்கம் மாநெல்லூர், ராசசந்திராபுரம், மாதர்பாக்கம் மாநெல்லூர், ஈகுவார்பாளையம்,கண்ணம்பாக்கம், என்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :